Skip to the text
திருவாய்மொழி

4-9. நண்ணாதார்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க" — பகைவர் இகழ்ந்து சிரிக்க, உற்றார் கரைந்து ஏங்க, எண்ண முடியாத துயரைத் தரும் இவை என்ன உலகியல் என்று ஆழ்வார் கேட்கும் பதிகம். துன்பத்தின் சமூக முகத்தை — பிறர் என்ன நினைப்பார்கள் என்பதை — நேரடியாகப் பேசும் அரிய பதிகம் இது. வலியை விடப் பார்வைகளே சில வேளை கடினமானவை.

திருவாய்மொழி 4-9 நண்ணாதார்‌

3095

நண்ணாதார்‌ முறுவலிப்ப நல்லுற்றார்‌ கரைந்தேங்க எண்ணாராத்‌ துயர்‌ விளைக்கும்‌ இவை என்ன உலகியற்கை? கண்ணாளா! கடல்‌ கடைந்தாய்‌! உனகழற்கே வரும்‌ பரிசு தண்ணாவாது அடியேனைப்‌ பணிகண்டாய்‌ சாமாறே

3096

சாமாறும்‌ கெடுமாறும்‌ தமருற்றார்‌ தலைத்‌ தலைப்பெய்து ஏமாறிக்‌ கிடந்து அலற்றும்‌ இவை என்ன உலகியற்கை? ஆமாறு ஒன்றறியேன்‌ நான்‌ அரவணையாய்‌! அம்மானே! கூமாறே விரை கண்டாய்‌ அடியேனைக்‌ குறிக்கொண்டே

3097

கொண்டாட்டம்‌ குலம்புனைவும்‌ தமறுற்றார்‌ விழுநிதியும்‌ வண்டார்‌ பூங்குழலாளும்‌ மனை ஒழிய உயிர்‌ மாய்தல்‌ கண்டாற்றேன்‌ உலகியற்கை கடல்வண்ணா! அடியேனை பண்டே போல்‌ கருதாது உன்‌ அடிக்கேகூய்ப்‌ பணிகொள்ளே

3098

கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பாக கொள்ளென்று தமம்மூடும்‌ இவை என்ன உலகியற்கை? வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்‌ பரிசு வள்ளல்‌ செய்து அடியேனை உனதருளால்‌ வாங்காயே

3099

வாங்கு நீர்‌ மலருலகில்‌ நிற்பனவும்‌ திரிவனவும்‌ ஆங்கு உயிர்கள்‌ பிறப்பிறப்புப்‌ பிணி மூப்பால்‌ தகர்ப்புண்ணும்‌ ஈங்கு இதன்‌ மேல்‌ வெந்நரகம்‌ இவை என்ன உலகியற்கை? வாங்கு எனை நீ மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே

3100

மறுக்கிவல்வலைப்படுத்திக்‌ குமைத்திட்டுக்‌ கொன்றுண்பர்‌ அறப்பொருளை அறிந்தோரார்‌ இவை என்ன உலகியற்கை? வெறித்துளவ முடியானே! வினையேனை உனக்கடிமை அறக்கொண்டாய்‌! இனி என்னாரமுதே! கூயருளாயே

3101

ஆயே! இவ்வுலகத்து நிற்பனவும்‌ திரிவனவும்‌ நீயே மற்றொரு பொருளும்‌ இன்றி நீ நின்றமையால்‌ நோயே முப்பிறப்பிறப்புப்‌ பிணியே என்றிவை ஒழிய கூயே கொள்‌ அடியேனைக்‌ கொடுவுலகம்‌ காட்டேலே

3102

காட்டி நீ கரந்து உமிழும்‌ நிலம்‌ நீர்‌ தீ விசும்பு கால்‌ ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர்‌ வாழ்‌ தனிமுட்டை கோட்டையினில்‌ கழித்து எனை உன்‌ கொழுஞ்சோதி உயரத்து கூட்டரிய திருவடிக்கள்‌ எஞ்ஞான்று கூட்டூதியே?

3103

கூட்டூதி நின்‌ குரைகழல்கள்‌ இமையோரும்‌ தொழா வகை செய்து ஆட்டூதி நீ அரவணையாய்‌! அடியேனும்‌ அஃதறிவன்‌ வேட்கை எல்லாம்‌ விடுத்து என்னை உன்‌ திருவடியே சுமந்துழல கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே

3104

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்‌ ஐங்கருவி கண்ட இன்பம்‌ தெரிவரிய அளவில்லாச்‌ சிற்றின்பம்‌ ஒண்தொடுயாள்‌ திருமகளும்‌ நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர்‌ கண்டொழிந்தேன்‌ அடைந்தேன்‌ உன்‌ திருவடியே

3105

திருவடியை நாரணனைக்‌ கேசவனைப்‌ பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதிச்‌ செழுங்குருகூர்ச்‌ சடகோபன்‌ திருவடிமேல்‌ உரைத்த தமிழ்‌ ஆயிரத்துள்‌ இப்பத்தும்‌ திருவடியே அடைவிக்கும்‌ திருவடி சேர்ந்து ஒன்றுமினே