Skip to the text
திருவாசிரியம்

திருவாசிரியம்‌ தனியன்‌

நம்மாழ்வார் · இயற்பா

திருவாசிரியம்‌ தனியன்‌

அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ அருளிச்‌ செய்தது

காசினியோர்‌ தாம்‌ வாழக்‌ கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப்‌ பாவதனால்‌ அருமறை நூல்‌ விரித்தானைத்‌ தேசிகனைப்‌ பராங்குசனைத்‌ திகழ்‌ வகுளத்‌ தாரானை மாசடையா மனத்து வைத்து மறவாமல்‌ வாழ்த்துதுமே