Skip to the text
திருவாய்மொழி

7-4. ஆழியெழ

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"ஆழி எழ, சங்கும் வில்லும் எழ, திசை வாழி எழ, தண்டும் வாளும் எழ" — ஆழியும் சங்கும் வில்லும் தண்டும் வாளும் ஒருங்கே எழுந்த காட்சியை வருணிக்கும் பதிகம். ஒவ்வொரு அடியிலும் "எழ" என்ற சொல் திரும்பத் திரும்ப ஒலித்து, எழுச்சியின் வேகத்தையே ஒலியால் உணர்த்துகிறது. பொருளையும் ஓசையையும் ஒன்றாக்கும் பாடல் இது.

திருவாய்மொழி 7-4 ஆழியெழ

3370

ஆழி எழச்‌ சங்கும்‌ வில்லும்‌ எழ திசை வாழி எழத்‌ தண்டும்‌ வாளும்‌ எழ அண்டம்‌ மோழை எழ முடி பாதம்‌ எழ அப்பன்‌ ஊழி எழ உலகம்‌ கொண்டவாறே

3371

ஆறு மலைக்கு எதிர்ந்தோடும்‌ ஒலி அர வறு சுலாய்‌ மலை தேய்க்கும்‌ ஒலி கடல்‌ மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்‌ சாறு பட அமுதம்‌ கொண்ட நான்றே

3372

நான்றில ஏழ்‌ மண்ணும்‌ தானத்தவே பின்னும்‌ நான்றில ஏழ்‌ மலை தானத்தவே பின்னும்‌ நான்றில ஏழ்‌ கடல்‌ தானத்தவே அப்பன்‌ ஊன்றி இடந்து எயிற்றில்‌ கொண்ட நாளே

3373

நாளும்‌ எழ நில நீரும்‌ எழ விண்ணும்‌ கோளும்‌ எழ எரி காலும்‌ எழ மலை தாளும்‌ எழச்‌ சுடர்‌ தானும்‌ எழ அப்பன்‌ ஊளி எழ உலகம்‌ உண்ட ஊணே

3374

ஊணுடை மல்லர்‌ ததர்ந்த ஒலி மன்னர்‌ ஆணுடைச்‌ சேனை நடுங்கும்‌ ஒலி விண்ணுள்‌ ஏணுடைத்‌ தேவர்‌ வெளிப்பட்ட ஒலி அப்பன்‌ காணுடைப்‌ பாரதம்‌ கையறை போழ்தே

3375

போழ்து மெலிந்த புன்‌ செக்கரில்‌ வான்‌ திசை சூழும்‌ எழுந்து உதிரப்‌ புனலா ்‌ மலை கீழ்து பிளந்த சிங்கம்‌ ஒத்ததால்‌ அப்பன்‌ ஆழ்‌ துயர்‌ செய்து அசுரரைக்‌ கொல்லுமாறே

3376

மாறு நிரைத்து இரைக்கும்‌ சரங்கள்‌ இன நூறு பிணம்‌ மலை போல்‌ புரள கடல்‌ ஆறு மடுத்து உதிரப்‌ புனலா அப்பன்‌ நீறு பட இலங்கை செற்ற நேரே

3377

நேர்‌ சரிந்தான்‌ கொடிக்‌ கோழி கொண்டான்‌ பின்னும்‌ நேர்‌ சரிந்தான்‌ எரியும்‌ அனலோன்‌ பின்னும்‌ நேர்‌ சரிந்தான்‌ முக்கண்‌ மூர்த்தி கண்டீர்‌ அப்பன்‌ நேர்‌ சரி வாணன்‌ திண்‌ தோள்‌ கொண்ட அன்றே

3378

அன்று மண்‌ நீர்‌ எரி கால்‌ விண்‌ மலை முதல்‌ அன்று சுடர்‌ இரண்டு பிறவும்‌ பின்னும்‌ அன்று மழை உயிர்‌ தேவும்‌ மற்றும்‌ அப்பன்‌ அன்று முதல்‌ உலகம்‌ செய்ததுமே

3379

மேய்‌ நிரை கீழ்‌ புக மா புரள சுனை வாய்‌ நிறை நீர்‌ பிளிறிச்‌ சொரிய இன ஆநிரை பாடி அங்கே ஒ௫ங்க அப்பன்‌ தீ மழை காத்துக்‌ குன்றம்‌ எடுத்தானே

3380

குன்றம்‌ எடுத்த பிரான்‌ அடியாரொடும்‌ ஒன்றி நின்ற சடகோபன்‌ உரை செயல்‌ நன்றி புனைந்த ஓராயிரத்துள்‌ இவை வென்றி தரும்‌ பத்தும்‌ மேவிக்‌ கற்பார்க்கே