Skip to the text
மூன்றாம் திருவந்தாதி

மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் · இயற்பா

Essence of this decad

பேயாழ்வார் அருளிய நூறு பாசுரங்கள். "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்" — முந்தையவர்கள் விளக்கேற்ற, இவர் கண்டதைச் சொல்லித் தொடங்குகிறார். தேடலின் மொழி முடிந்து, தரிசனத்தின் மொழி தொடங்கும் இடம் இது. திருமகளையும் திருமேனியையும் ஒருசேரக் கண்டதாகச் சொல்வதில் இந்நூலின் மையம் அடங்கியிருக்கிறது.

2282

திருக்கண்டேன்‌ பொன்‌ மேனி கண்டேன்‌ திகழும்‌ அருக்கனணி நிறமும்‌ கண்டேன்‌ - செருக்கிளரும்‌ பொன்னாழி கண்டேன்‌ புரி சங்கம்‌ கைக்கண்டேன்‌ என்னாழி வண்ணன்‌ பால்‌ இன்று !

2283

இன்றே கழல்‌ கண்டேன்‌ ஏழ்‌ பிறப்பும்‌ யான்‌ அறுத்தேன்‌ பொன்‌ தோய்‌ வரை மார்பில்‌ பூந்துழாய்‌ - அன்று திருக்கண்டு கொண்ட திருமாலே! உன்னை மருக்கண்டு கொண்டென்‌ மனம்‌

2284

மனத்துள்ளான்‌ மாகடல்‌ நீர்‌ உள்ளான்‌ மலராள்‌ தனத்துள்ளான்‌ தண்துழாய்‌ மார்பன்‌ - சினத்துச்‌ செருநருகச்‌ செற்று உகந்த தேங்கோத வண்ணன்‌ வரு நரகம்‌ தீர்க்கும்‌ மருந்து

2285

மருந்தும்‌ பொருளும்‌ அமுதமும்‌ தானே திருந்திய செங்கண்மால்‌ ஆங்கே - பொருந்தியும்‌ நின்று உலகம்‌ உண்டூ உமிழ்ந்தும்‌ நீர்‌ ஏற்றும்‌ மூவடியால்‌ அன்று உலகம்‌ தாயோன்‌ அடி

2286

அடி வண்ணம்‌ தாமரை அன்று உலகம்‌ தாயோன்‌ படி வண்ணம்‌ பார்க்கடல்‌ நீர்‌ வண்ணம்‌ - முடி வண்ணம்‌ ஓராழி வெய்யோன்‌ ஒளியும்‌ அஃதன்றே ஆராழி கொண்டாற்கு அழகு

2287

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர்‌ வண்ணம்‌ அழகன்றே அண்டங்கடத்தல்‌ - அழகன்றே அங்கை நீர்‌ ஏற்றாற்கு அலர்‌ மேலோன்‌ கால்‌ கழுவ கங்கை நீர்‌ கான்ற கழல்‌

2288

கழல்‌ தொழுதும்‌ வா நெஞ்சே! கார்க்கடல்‌ நீர்‌ வேலை பொழில்‌ அளந்த புள்ளூர்திச்‌ செல்வன்‌ - எழில்‌ அளந்தங்கு எண்ணற்கு அரியானை எப்பொருட்கும்‌ சேயானை நண்ணற்கு அரியானை நாம்‌

2289

நாமம்‌ பல சொல்லி நாராயணா என்று நாமங்கையால்‌ தொழுதும்‌ நன்னெஞ்சே! - வா மருவி மண்ணுலகம்‌ உண்டு உமிழ்ந்த வண்டறையும்‌ தண்துழாய்‌ கண்ணனையே காண்க நங்கண்‌

2290

கண்ணும்‌ கமலம்‌ கமலமே கைத்தலமும்‌ பொருந்திய பாற்கடல்‌ மண்ணளந்த பாதமும்‌ மற்றவையே - எண்ணில்‌ கருமா முகில்‌ வண்ணன்‌ கார்க்கடல்‌ நீர்‌ வண்ணன்‌ திருமாமணிவண்ணன்‌ தேசு

2291

தேசும்‌ திறலும்‌ திருவும்‌ உருவமும்‌ மாசில்‌ குடிப்பிறப்பும்‌ மற்றவையும்‌ - பேசில்‌ வலம்‌ புரிந்த வான்சங்கம்‌ கொண்டான்‌ பேரோத நலம்‌ புரிந்து சென்றடையும்‌ நன்கு

2292

நன்கோதும்‌ நால்‌ வேதத்துள்ளான்‌ நறவிரியும்‌ பொங்கோதருவிப்‌ புனல்‌ வண்ணன்‌ - சங்கோதப்‌ பாற்கடலான்‌ பாம்பணையின்‌ மேலான்‌ பயின்று உரைப்பார்‌ நூற்கடலான்‌ நுண்ணறிவினான்‌

2293

அறிவென்னும்‌ தாள்‌ கொளுவி ஐம்புலனும்‌ தம்மில்‌ செறிவென்னும்‌ திண்‌ கதவம்‌ செம்மி - மறை என்றும்‌ நன்கோதி நன்குணர்வார்‌ காண்பரே நாள்‌ தோறும்‌ பைங்கோத வண்ணன்‌ படி

2294

படிவட்டத்‌ தாமரை பண்டூலகம்‌ நீர்‌ ஏற்று அடிவட்டத்தால்‌ அளப்ப நீண்ட - முடிவட்டம்‌ ஆகாயம்‌ ஊடறுத்து அண்டம்‌ போய்‌ நீண்டதே மாகாயமாய்‌ நின்ற மாற்கு

2295

மாற்பால்‌ மனம்‌ சுழிப்ப மங்கையர்‌ தோள்‌ கை விட்டூ நூற்பால்‌ மனம்‌ வைக்க நொய்விதாம்‌ - நாற்பால வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பணிந்து

2296

பணிந்து உயர்ந்த பெளவப்‌ படூதிரைகள்‌ மோத பணிந்த பணமணிகளாலே - அணிந்து அங்கு அனந்தன்‌ அணைக்‌ கிடக்கும்‌ அம்மான்‌ அடியேன்‌ மனம்‌ தன்‌ அணைக்‌ கிடக்கும்‌ வந்து

2297

வந்துதைத்த வெண்திரைகள்‌ செம்பவள வெண்முத்தம்‌ அந்தி விளக்கும்‌ அணி விளக்காம்‌ - எந்தை ஒருவல்லித்‌ தாமரையாள்‌ ஒன்றிய சீர்‌ மார்வன்‌ திருவல்லிக்கேணியான்‌ சென்று

2298

சென்ற நாள்‌ செல்லாத செங்கண்‌ மால்‌ எங்கள்‌ மால்‌ என்ற நாள்‌ என்னாளும்‌ நாளாகும்‌ - என்றும்‌ இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்‌ மறவாது வாழ்த்துக என்‌ வாய்‌

2299

வாய்‌ மொழிந்து வாமனனாய்‌ மாவலி பால்‌ மூவடி மண்‌ நீ அளந்து கொண்ட நெடுமாலே! - தாவிய நின்‌ எஞ்சா இணை அடிக்கே ஏழ்‌ பிறப்பும்‌ ஆளாகி அஞ்சாதிருக்க அருள்‌

2300

அருளாது ஒழியுமே? ஆலிலை மேல்‌ அன்று தெருளாத பிள்ளையாய்ச்‌ சேர்ந்தான்‌ - இருளாத சிந்தையராய்ச்‌ சேவடிக்கே செம்மலர்‌ தூய்க்‌ கை தொழுது முந்தையராய்‌ நிற்பார்க்கு முன்‌

2301

முன்‌ உலகம்‌ உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம்‌ ஈரடியால்‌ பின்‌ அளந்து கோடல்‌ பெரிதொன்றே? - என்னே! திருமாலே! செங்கண்‌ நெடியானே! எங்கள்‌ பெருமானே! நீ இதனைப்‌ பேசு

2302

பேசுவார்‌ எவ்வளவு பேசுவர்‌ அவ்வளவே வாச மலர்த்‌ துழாய்‌ மாலையான்‌ - தேசுடைய சக்கரத்தான்‌ சங்கினான்‌ சார்ங்கத்தான்‌ பொங்கரவ வக்கரனைக்‌ கொன்றான்‌ வடிவு

2303

வடிவார்‌ முடிகோட்டி வானவர்கள்‌ நாளும்‌ கடியார்‌ மலர்‌ தூவிக்‌ காணும்‌ - படியானை செம்மையால்‌ உள்ளுருகிச்‌ செவ்வனே நெஞ்சமே! மெய்ம்மையே காண விரும்பு

2304

விரும்பி விண்‌ மண்‌ அளந்த அஞ்சிறைய வண்டார்‌ சுரும்பு தொளையில்‌ சென்றூத - அரும்பும்‌ புனந்துமாய்‌ மாலையான்‌ பொன்னங்கழற்கே மனம்‌ துழாய்‌ மாலாய்‌ வரும்‌

2305

வருங்கால்‌ இருநிலனும்‌ மால்‌ விசும்பும்‌ காற்றும்‌ நெருங்கு தீ நீர்‌ உருவும்‌ ஆனான்‌ - பொருந்தும்‌ சுடராழி ஒன்றுடையான்‌ சூழ்‌ கழலே நாளும்‌ தொடராழி நெஞ்சே! தொழுது

2306

தொழுதால்‌ பழுதுன்டே? தூநீர்‌ உலகம்‌ முழுதுன்டு மொய்குழலாள்‌ ஆய்ச்சி - விழுதுண்ட வாயானை மால்‌ விடை ஏம்‌ செற்றானை வானவர்க்கும்‌ சேயானை நெஞ்சே! சிறந்து 25 இழுதுண்ட

2307

சிறந்த என்‌ சிந்தையும்‌ செங்கண்‌ அரவும்‌ நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சி உள்ளும்‌ - உறைந்ததுவும்‌ வேங்கடமும்‌ வெஃகாவும்‌ வேளுக்கைப்‌ பாடியுமே தாம்‌ கடவார்‌ தண்துழாயார்‌

2308

ஆரே துயருழந்தார்‌ துன்புற்றாராண்டையார்‌? காரே மலிந்த கருங்கடலை - நேரே கடைந்தானைக்‌ காரணனை நீரணை மேல்‌ பள்ளி அடைந்தானை நாளும்‌ அடைந்து

2309

அடைந்தது அரவணை மேல்‌ ஐவர்க்காய்‌ அன்று மிடைந்தது பாரத வெம்போர்‌ - உடைந்ததுவும்‌ ஆய்ச்சி பால்‌ மத்துக்கே அம்மனே! வாள்‌ எயிற்றுப்‌ பேய்ச்சி பால்‌ உண்ட பிரான்‌

2310

பேய்ச்சி பால்‌ உண்ட பெருமானைப்‌ பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள்‌ அஞ்சாதே - வாய்த்த இருளார்‌ திருமேனி இன்பவளச்‌ செவ்வாய்‌ தெருளா மொழியானைச்‌ சேர்ந்து

2311

சேர்ந்த திருமால்‌ கடல்‌ குடந்தை வேங்கடம்‌ நேர்ந்த என்‌ சிந்தை நிறை விசும்பும்‌ - வாய்ந்த மறை பாடகம்‌ அனந்தன்‌ வண்துழாய்க்‌ கண்ணி இறை பாடியாய இவை

2312

இவையவன்‌ கோயில்‌ இரணியனது ஆகம்‌ அவை செய்து அரி உருவம்‌ ஆனான்‌ - செவி தெரியா நாகத்தான்‌ நால்‌ வேதத்து உள்ளான்‌ நறவேற்றான்‌ பாகத்தான்‌ பாற்கடல்‌ உளான்‌

2313

பாற்கடலும்‌ வேங்கடமும்‌ பாம்பும்‌ பனிவிசும்பும்‌ நூற்கடலும்‌ நுண்ணூல தாமரை மேல்‌ - பாற்பட்டூ இருந்தார்‌ மனமும்‌ இடமாகக்‌ கொண்டான்‌ குருந்தொசித்த கோபாலகன்‌

2314

பாலகனாய்‌ ஆலிலை மேல்‌ பைய உலகெல்லாம்‌ மேல்‌ ஒரு நாள்‌ உண்டவனே! மெய்ம்மையே - மாலவனே! மந்தரத்தால்‌ மாநீர்க்‌ கடல்‌ கடைந்து வானமுதம்‌ அந்தரத்தார்க்கு ஈந்தாய்‌ நீ அன்று

2315

அன்று இவ்வுலகம்‌ அளந்த அசைவே கொல்‌? நின்று இருந்து வேளுக்கை நீள்நகர்வாய்‌ - அன்று கிடந்தானைக்‌ கேடில்‌ சீரானை முன்‌ கஞ்சைக்‌ கடந்தானை நெஞ்சமே! காண்‌

2316

காண்‌ காண்‌ என விரும்பும்‌ கண்கள்‌ கதிரிலகு பூண்தார்‌ அகலத்தான்‌ பொன்மேனி - பாண்கண்‌ தொழில்‌ பாடி வண்டறையும்‌ தொங்கலான்‌ செம்பொன்‌ கழல்‌ பாடி யாம்‌ தொழுதும்‌ கை

2317

கைய கனலாழி கார்க்கடல்வாய்‌ வெண்சங்கம்‌ வெய்ய கதை சார்ங்கம்‌ வெஞ்சுடர்வாள்‌ - செய்ய படை பரவை பாழி பனி நீருலகம்‌ அடி அளந்த மாயர்‌ அவர்க்கு

2318

அவற்கு அடிமைப்பட்டேன்‌ அகத்தான்‌ புறத்தான்‌ உவர்க்கும்‌ கருங்கடல்‌ நீர்‌ உள்ளான்‌ - துவர்க்கும்‌ பவளவாய்ப்‌ பூமகளும்‌ பன்மணிப்‌ பூணாரம்‌ திகழும்‌ திருமார்பன்‌ தான்‌

2319

தானே தனக்கு உவமன்‌ தன்‌ உருவே எவ்வுருவும்‌ தானே தவவுருவும்‌ தாரகையும்‌ - தானே எரி சுடரும்‌ மால்‌ வரையும்‌ எண்திசையும்‌ அண்டத்து இருசுடரும்‌ ஆய இறை

2320

இறையாய்‌ நிலனாகி எண்திசையும்‌ தானாய்‌ மறையாய்‌ மறைப்‌ பொருளாய்‌ வானாய்‌ - பிறை வாய்ந்த வெள்ளத்தருவி விளங்கொலி நீர்‌ வேங்கடத்தான்‌ உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌

2321

உளன்‌ கண்டாய்‌ நல்நெஞ்சே! உத்தமன்‌ என்றும்‌ உளன்‌ கண்டாய்‌ உள்ளுவார்‌ உள்ளத்து - உளன்‌ கண்டாய்‌ விண்ணொடூங்கக்‌ கோடுூயரும்‌ வீங்கருவி வேங்கடத்தான்‌ மண்ணொடுங்கத்‌ தான்‌ அளந்த மன்‌

2322

மன்னு மணி முடி நீண்டு அண்டம்‌ போய்‌ எண்திசையும்‌ துன்னு பொழில்‌ அனைத்தும்‌ சூழ்‌ கழலே - மின்னை உடையாகக்‌ கொண்டு அன்று உலகளந்தான்‌ குன்றம்‌ குடையாக ஆ காத்த கோ

2323

கோவலனாய்‌ ஆநிரைகள்‌ மேய்த்துக்‌ குழல்‌ ஊதி மாவலனாய்க்‌ கீண்ட மணிவண்ணன்‌ - மேவி அரி! உருவம்‌ ஆகி இரணியனது ஆகம்‌ தெரியுகிரால்‌ கீண்டான்‌ சினம்‌

2324

சினமா மத களிற்றின்‌ திண்மருப்பைச்‌ சாய்த்து புனமேய பூமி அதனை - தனமாகப்‌ பேரகலத்து உள்ளொடுக்கும்‌ பேரார மார்வனார்‌ ஓரகலத்து உள்ளது உலகு

2325

உலகமும்‌ ஊழியும்‌ ஆழியும்‌ ஒண்கேழ்‌ அலர்‌ கதிரும்‌ செந்தீயும்‌ ஆவான்‌ - பல கதிர்கள்‌ பாரித்த பைம்பொன்‌ மூடியான்‌ அடி இணைக்கே பூரித்து என்‌ நெஞ்சே! புரி

2326

புரிந்து மத வேழம்‌ மாப்பிடியோடூ ஊடி திரிந்து சினத்தால்‌ பொருது - விரிந்த சீர்‌ வெண்கோட்டு முத்துதிர்க்கும்‌ வேங்கடமே மேலொரு நாள்‌ மண்கோட்டுக்‌ கொண்டான்‌ மலை

2327

மலை முகடூ மேல்‌ வைத்து வாசுகியைச்‌ சுற்றி தலை முகடூ தான்‌ ஒரு கை பற்றி - அலை முகட்டூ அண்டம்‌ போய்‌ நீர்‌ தெறிப்ப அன்று கடல்‌ கடைந்தான்‌ பிண்டமாய்‌ நின்ற பிரான்‌

2328

நின்ற பெருமானே! நீர்‌ ஏற்று உலகெல்லாம்‌ சென்ற பெருமானே! செங்கண்ணா! - அன்று துரகவாய்‌ கீண்ட துழாய்‌ முடியாய்‌! நங்கள்‌ நரகவாய்‌ கீண்டாயும்‌ நீ

2329

நீயன்றே நீர்‌ ஏற்று உலகம்‌ அடி அளந்தாய்‌? நீயன்றே நின்று நிரை மேய்த்தாய்‌? - நீயன்றே மாவாயுரம்‌ பிளந்து மாமருதினூடுூ போய்‌ தேவாசுரம்‌ பொருதாய்‌ செற்று?

2330

செற்றதுவும்‌ சேரா இரணியனை சென்றேற்றுப்‌ பெற்றதுவும்‌ மாநிலம்‌ பின்னைக்காய்‌ - முற்றல்‌ முரியேற்றின்‌ முன்னின்று மொய்ம்பொழித்தாய்‌! மூரிச்‌ சுரியேறு சங்கினாய்‌! சூழ்ந்து

2331

சூழ்ந்த துழாய்‌ அலங்கல்‌ சோதி மணி முடி மால்‌ தாழ்ந்த அருவித்‌ தடவரைவாய்‌ - ஆழ்ந்த மணி நீர்ச்‌ சுனை வளர்ந்த மாமுதலை கொன்றான்‌ அணி நீல வண்ணத்தவன்‌

2332

அவனே அருவரையால்‌ ஆநிரைகள்‌ காத்தான்‌ அவனே அணி மருதம்‌ சாய்த்தான்‌ - அவனே கலங்காப்‌ பெருநகரம்‌ காட்டுவான்‌ கண்டீர்‌ இலங்காபுரம்‌ எரித்தான்‌ எய்து

2333

எய்தான்‌ மராமரம்‌ ஏழும்‌ இராமனாய்‌ எய்தான்‌ அம்மான்‌ மறியை ஏந்திழைக்காய்‌ - எய்ததுவும்‌ தென்னிலங்கைக்‌ கோன்‌ வீழ சென்று குறள்‌ உருவாய்‌ முன்னிலங்கைக்‌ கொண்டான்‌ முயன்று

2334

முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர்‌ வேலை இயன்றமரத்து ஆலிலையின்‌ மேலால்‌ - பயின்றங்கோர்‌ மண்ணலங்கொள்‌ வெள்ளத்து மாயக்‌ குழவியாய்‌ தண்ணலங்கல்‌ மாலையான்‌ தாள்‌

2335

தாளால்‌ சகடம்‌ உதைத்துப்‌ பகடூந்தி கீளா மருதிடை போய்க்‌ கேழலாய்‌ - மீளாது மண்ணகலம்‌ கீண்டு அங்கோர்‌ மாதுகந்த மார்வற்கு பெண்ணகலம்‌ காதல்‌ பெரிது

2336

பெரிய வரை மார்பில்‌ பேராரம்‌ பூண்டு கரிய முகிலிடை மின்‌ போல - தெரியுங்கால்‌ பாணொடூங்க வண்டறையும்‌ பங்கயமே மற்றவன்‌ தன்‌ நீள்‌ நெடுங்கண்‌ காட்டும்‌ நிறம்‌

2337

நிறம்‌ வெளிது செய்து பசிது கரிதென்று இறை உருவம்‌ யாம்‌ அறியோம்‌ எண்ணில்‌ - நிறைவுடைய நாமங்கை தானும்‌ நலம்‌ புகழ வல்லளே? பூமங்கை கேள்வன்‌ பொலிவு

2338

பொலிந்திருண்ட கார்வானில்‌ மின்னே போல்‌ தோன்றி மலிந்து திருவிருந்த மார்வன்‌ - பொலிந்த கருடன்‌ மேல்‌ கொண்ட கரியான்‌ கழலே தெருடன்‌ மேல்‌ கண்டாய்‌ தெளி

2339

தெளிந்த சிலாதலத்தின்‌ மேல்‌ இருந்த மந்தி அளிந்த கடுவனையே னோக்கி - விளங்கிய வெண்மதியம்‌ தாவென்னும்‌ வேங்கடமே மேலொரு நாள்‌ மண்மதியில்‌ கொண்டூகந்தான்‌ வாழ்வு

2340

வாழும்‌ வகை அறிந்தேன்‌ மை போல்‌ நெடுவரைவாய்‌ தாழும்‌ அருவி போல்‌ தார்‌ கிடப்ப - சூழும்‌ திருமாமணிவண்ணன்‌ செங்கண்மால்‌ எங்கள்‌ பெருமான்‌ அடி சேரப்‌ பெற்று

2341

பெற்றம்‌ பிணை மருதம்‌ பேய்முலை மாச்சகடம்‌ முற்றக்காத்தூடு போய்‌ உண்டுதைத்து - கற்றுக்‌ குணிலை விளங்கனிக்குக்‌ கொண்டூ எறிந்தான்‌ வெற்றிப்‌ பணிலம்‌ வாய்‌ வைத்து உகந்தான்‌ பண்டூ

2342

பண்டெல்லாம்‌ வேங்கடம்‌ பாற்கடல்‌ வைகுந்தம்‌ கொன்டங்கு உறைவார்க்குக்‌ கோயில்‌ போல்‌ - வண்டு வளங்கிளரும்‌ நீள்சோலை வண்பூங்கடிகை இளங்குமரன்‌ தன்‌ விண்ணகர்‌

2343

விண்ணகரம்‌ வெஃகா விரிதிரைநீர்‌ வேங்கடம்‌ மண்ணகரம்‌ மாமாட வேளுக்கை - மண்ணகத்த தென்‌ குடந்தை தேனார்‌ திருவரங்கம்‌ தென்கோட்டி தன்‌ குடங்கை நீர்‌ ஏற்றான்‌ தாழ்வு

2344

தாழ்‌ சடையும்‌ நீள்முடியும்‌ ஒண்மழுவும்‌ சக்கரமும்‌ சூழரவும்‌ பொன்னாணும்‌ தோன்றுமால்‌ - சூழும்‌ திரண்டருவி பாயும்‌ திருமலை மேல்‌ எந்தைக்கு இரண்டூருவும்‌ ஒன்றாய்‌ இசைந்து

2345

இசைந்த அரவமும்‌ வெற்பும்‌ கடலும்‌ பசைந்தங்கமுது படூப்ப - அசைந்து கடைந்த வருத்தமோ? கச்சி வெஃகாவில்‌ கிடந்து இருந்து நின்றதுவும்‌ அங்கு?

2346

அங்கற்கிடரின்றி அந்திப்‌ பொழுதத்து மங்க இரணியனது ஆகத்தை - பொங்கி அரி உருவமாய்ப்‌ பிளந்த அம்மானவனே கரி உருவம்‌ கொம்பொசித்தான்‌ காய்ந்து

2347

காய்ந்திருளை மாற்றிக்‌ கதிரிலகு மாமணிகள்‌ படைப்ப அங்கக்கிடறின்றி ஏய்ந்த பணக்கதிர்‌ மேல்‌ வெவ்வுயிர்ப்ப - வாய்ந்த மது கைடவரும்‌ வயிறுருகி மாண்டார்‌ அது கேடவர்க்கு இறுதியாங்கு

2348

ஆங்கு மலரும்‌ குவியுமாலுந்திவாய்‌ ஓங்கு கமலத்தின்‌ ஒண்போது - ஆங்கைத்‌ திகிரி சுடர்‌ என்றும்‌ வெண்சங்கம்‌ வானில்‌ பகரு மதியென்றும்‌ பார்த்து

2349

பார்த்த கடுவன்‌ சுனை நீர்‌ நிழல்‌ கண்டு பேர்த்தோர்‌ கடுவன்‌ எனப்‌ பேர்ந்து - கார்த்த களங்கனிக்குக்‌ கை நீட்டும்‌ வேங்கடமே மேல்‌ நாள்‌ விளங்கனிக்குக்‌ கன்றெறிந்தான்‌ வெற்பு

2350

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியந்துழாய்‌ கற்பென்று சூடும்‌ கருங்குழல்‌ மேல்‌ - மல்‌ பொன்ற நீண்ட தோள்‌ மால்‌ கிடந்த நீள்‌ கடல்‌ நீராடுவான்‌ பூண்ட நாள்‌ எல்லாம்‌ புகும்‌

2351

புகுமதத்தால்‌ வாய்‌ பூசிக்‌ கீழ்‌ தாழ்ந்து அருவி உகு மதத்தால்‌ கால்‌ கழுவிக்‌ கையால்‌ - மிகு மதத்‌ தேன்‌ விண்ட மலர்‌ கொண்டு விறல்‌ வேங்கடவனையே கண்டு வணங்கும்‌ களிறு

2352

களிறு முகில்‌ குத்தக்‌ கை எடூத்தோடி ஒளிறு மருப்பொசிகை யாளி - பிளிறி விழ கொன்று நின்றதிரும்‌ வேங்கடமே மேல்‌ நாள்‌ குழக்கன்று கொண்டெறிந்தான்‌ குன்று

2353

குன்று ஒன்றினாய குறமகளிர்‌ கோல்வளைக்‌ கை சென்று விளையாடும்‌ தீங்கழை போய்‌ - வென்று விளங்கு மதி கோள்‌ விடுக்கும்‌ வேங்கடமே மேலை இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌

2354

இடம்‌ வலம்‌ ஏழ்‌ பூண்ட இரவித்‌ தேர்‌ ஓட்டி வடமுக வேங்கடத்து மன்னும்‌ - குடம்‌ நயந்த கூத்தனாய்‌ நின்றான்‌ குரைகழலே கூறுவதே நாத்தன்னால்‌ உள்ள நலம்‌

2355

நலமே வலிது கொல்‌? நஞ்சூட்டுவன்‌ பேய்‌ நிலமே புரண்டு போய்‌ வீழ - சலமே தான்‌ வெங்கொங்கை உண்டானை மீட்டாய்ச்சி ஊட்டூவான்‌ தன்‌ கொங்கை வாய்‌ வைத்தாள்‌ சார்ந்து

2356

சார்ந்தகடூ தேய்ப்பத்‌ தடாவிய கோட்டூச்சி வாய்‌ ஊர்ந்தியங்கும்‌ வெண்மதியின்‌ ஒண்முயலை - சேர்ந்து சினவேங்கை பார்க்கும்‌ திருமலையே ஆயன்‌ புனவேங்கை நாறும்‌ பொருப்பு

2357

பொருப்பிடையே நின்றும்‌ புனல்‌ குளித்தும்‌ ஐந்து நெருப்பிடையே நிற்கவும்‌ நீர்‌ வேண்டா - விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்‌ தூய்க்‌ கை தொழுதால்‌ அஃகாவே தீவினைகள்‌ ஆய்ந்து

2358

ஆய்ந்த அருமறையோன்‌ நான்முகத்தோன்‌ நன்குறங்கில்‌ வாய்ந்த குழவியாய்‌ வாள்‌ அரக்கன்‌ - ஏய்ந்த முடிப்போது மூன்றேழ்‌ என்றெண்ணினான்‌ ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்‌

2359

அரணாம்‌ நமக்கு என்றும்‌ ஆழி வலவன்‌ முரணாள்‌ வலம்‌ சுழிந்த மொய்ம்பன்‌ - சரணா மேல்‌ ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே ஓது கதி மாயனையே' ஓர்த்து

2360

ஓர்த்த மனத்தராய்‌ ஐந்தடக்கி ஆராய்ந்து பேர்த்தால்‌ பிறப்பேழும்‌ பேர்க்கலாம்‌ - கார்த்த விரையார்‌ நறுந்துழாய்‌ வீங்கோத மேனி நிரையார மார்வனையே நின்று

2361

நின்று எதிராய நிரைமணித்தேர்‌ வாணன்‌ தோள்‌ ஒன்றிய ஈரைஞ்ஞூறு உடன்‌ துணிய - வென்றிலங்கும்‌ ஆர்‌ படுவான்‌ நேமி அரவணையான்‌ சேவடிக்கே நேர்‌ படுவான்‌ தான்‌ முயலும்‌ நெஞ்சு

2362

நெஞ்சால்‌ நினைப்பரியனேலும்‌ நிலைப்‌ பெற்று என்‌ நெஞ்சமே! பேசாய்‌ நினைக்குங்கால்‌ - நெஞ்சத்துப்‌ பேராது நிற்கும்‌ பெருமானை என்‌ கொலோ? ஓராது நிற்பது உணர்வு

2363

உணரில்‌ உணர்வரியன்‌ உள்ளம்‌ புகுந்து மென்மலர்‌ சுழித்த ! மாதவனையே புணரிலும்‌ காண்பரியன்‌ உண்மை - இணரணையக்‌ கொங்கணைந்து வண்டறையும்‌ தண்துழாய்க்‌ கோமானை எங்கணைந்து காண்டும்‌ இனி?

2364

இனியவன்‌ மாயன்‌ என உரைப்பரேலும்‌ இனியவன்‌ காண்பரியனேலும்‌ - இனியவன்‌ கள்ளத்தால்‌ மண்‌ கொண்டு விண்‌ கடந்த பைங்கழலான்‌ உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌

2365

உளனாய நான்மறையின்‌ உட்பொருளை உள்ளத்து உளனாகத்‌ தேர்ந்து உணர்வரேலும்‌ - உளனாய வண்தாமரை நெடுங்கண்‌ மாயவனை யாவரே? கண்டார்‌ உகப்பர்‌ கவி

2366

கவியினார்‌ கைபுனைந்து கண்ணார்‌ கழல்‌ போய்‌ செவியினார்‌ கேள்வியராய்ச்‌ சேர்ந்தார்‌ - புவியினார்‌ போற்றி உரைக்கப்‌ பொலியுமே? பின்னைக்கா ஏற்றுயிரை அட்டான்‌ எழில்‌

2367

எழில்‌ கொண்டூ மின்னுக்கொடி எடூத்து வேகத்‌ தொழில்‌ கொண்டூ தான்‌ முழங்கித்‌ தோன்றும்‌ - எழில்‌ கொண்ட நீர்‌ மேக மன்ன நெடுமால்‌ நிறம்‌ போல கார்‌ வானம்‌ காட்டும்‌ கலந்து

2368

கலந்து மணி இமைக்கும்‌ கண்ணா! நின்‌ மேனி மலர்ந்து மரதகமே காட்டும்‌ - நலந்திகழும்‌ கொந்தின்வாய்‌ வண்டறையும்‌ தண்துழாய்க்‌ கோமானை அந்தி வான்‌ காட்டும்‌ அது

2369

அது நன்று இது தீதென்று ஐயப்படாதே மது நின்ற தண்துழாய்‌ மார்வன்‌ - பொது நின்ற பொன்னங்கழலே தொழுமின்‌ முழு வினைகள்‌ முன்னம்‌ கழலும்‌ முடிந்து

2370

முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌ ஏனம்‌ படிந்துழுசால்‌ பைந்தினைகள்வித்த - தடிந்தெழுந்த வேய்ங்கழை போய்‌ விண்‌ திறக்கும்‌ வேங்கடமே மேலொரு நாள்‌ தீங்குழல்‌ வாய்‌ வைத்தான்‌ சிலம்பு

2371

சிலம்பும்‌ செறிகழலும்‌ சென்றிசைப்ப விண்ணாறு அலம்பிய சேவடி போய்‌ அண்டம்‌ - புலம்பிய தோள்‌ எண்திசையும்‌ சூழ இடம்‌ போதாது என்‌ கொலோ? வண்டுமாய்‌ மால்‌ அளந்த மண்‌

2372

மண்‌ உண்டும்‌ பேய்ச்சி முலை உண்டும்‌ ஆற்றாதாய்‌ வெண்ணெய்‌ விழுங்க வெகுண்டு ஆய்ச்சி - கண்ணிக்‌ கயிற்றினால்‌ கட்டத்‌ தான்‌ கட்டுண்டு இருந்தான்‌ வயிற்றினோடு ஆற்றா மகன்‌

2373

மகன்‌ ஒருவர்க்கு அல்லாத மாமேனி மாயன்‌ மகனாம்‌ அவன்‌ மகன்‌ தன்‌ காதல்‌ - மகனை சிறை செய்த வாணன்‌ தோள்‌ செற்றான்‌ கழலே நிறை செய்து என்‌ நெஞ்சே! நினை

2374

நினைத்து உலகில்‌ ஆர்‌ தெளிவார்‌? நீண்ட திருமால்‌ அனைத்துலகும்‌ உள்‌ ஒடுக்கி ஆல்‌ மேல்‌ - கனைத்துலவு வெள்ளத்தோர்‌ பிள்ளையாய்‌ மெள்ளத்‌ துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே! உய்த்து

2375

உய்த்து உணர்வென்னும்‌ ஒளி கொள்‌ விளக்கேற்றி வைத்து அவனை நாடி வலைப்படூத்தேன்‌ - மெத்தெனவே நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ என்‌ நெஞ்சத்து பொன்றாமை மாயன்‌ புகுந்து

2376

புகுந்து இலங்கும்‌ அந்திப்‌ பொழுதத்து அரியாய்‌ இகழ்ந்த இரணியனது ஆகம்‌ - சுகிர்ந்தெங்கும்‌ சிந்தப்‌ பிளந்த திருமால்‌ திருவடியே வந்தித்து என்‌ நெஞ்சமே! வாழ்த்து

2377

வாழ்த்திய வாயராய்‌ வானோர்‌ மணிமகுடம்‌ தாழ்த்தி வணங்கத்‌ தழும்பாமே - கேழ்த்த அடித்‌ தாமரை மலர்‌ மேல்‌ மங்கை மணாளன்‌ அடித்‌ தாமரையாமலர்‌

2378

அலர்‌ எடுத்த உந்தியான்‌ ஆங்கு எழிலாய மலர்‌ எடுத்த மாமேனி மாயன்‌ - அலர்‌ எடூத்த வண்ணத்தான்‌ மாமலரான்‌ வார்‌ சடையான்‌ என்றிவர்கட்கு எண்ணத்‌ தான்‌ ஆமோ? இமை

2379

இமம்‌ சூழ்‌ மலையும்‌ இருவிசும்பும்‌ காற்றும்‌ அமஞ்சூழ்ந்தற விளங்கித்‌ தோன்றும்‌ - நமன்‌ சூழ்‌ நரகத்து நம்மை நணுகாமல்‌ காப்பான்‌ துரகத்தை வாய்‌ பிளந்தான்‌ தொட்டூ

2380

தொட்ட படை எட்டூம்‌ தோலாத வென்றியான்‌ அட்டபுயகரத்தான்‌ அஞ்ஞான்று - குட்டத்துக்‌ கோள்‌ முதலை துஞ்சக்‌ குறித்தெறிந்த சக்கரத்தான்‌ தாள்‌ முதலே நங்கட்குச்‌ சார்வு

2381

சார்வு நமக்கென்றும்‌ சக்கரத்தான்‌ தண்துழாய்த்‌ தார்வாழ்‌ வரை மார்பன்‌ தான்‌ முயங்கும்‌ - காரார்ந்த வானமருமின்னிமைக்கும்‌ வண்தாமரை நெடூங்கண்‌ தேனமரும்‌ பூ மேல்‌ திரு 100 தசக அடிவரவு: திரு நன்கு பேசுவார்‌ இவை மன்னும்‌ அவனே பண்டு களிறு நெஞ்சால்‌ மண்ணுண்டூம்‌ நான்முகன்‌ பேயாழ்வார்‌ திருவடிகளே ஷரணம்‌