மைந்நின்ற கருங்கடல்வாய் உலகின்றி வானவரும் யாமுமெல்லாம் நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர் எந்நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்? செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள்! அண்டனையே ஏத்தீர்களே
11-6. மைந்நின்ற
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
கருங்கடல் சூழ்ந்த உலகும், வானவரும், யாமும் — அனைவரும் நெய்போல் ஒளிரும் சக்கரத்தை ஏந்தியவனுடையவர் என்று சொல்லும் பதிகம். சேர்ந்திருப்பவரின் பட்டியலில் ஆழ்வார் தன்னையும் சேர்த்துக்கொள்கிறார். "யாமும் எல்லாம்" என்ற சொல்லில் இடம்பெறும் நிம்மதி கவனிக்கத்தக்கது.
பெரிய திருமொழி 11-6 - மைந்நின்ற (ப்ரளய ஆபத்தில் பாதுகாத்த எம்பெருமானையே ஆவ்ரயிக்கும்படி உலகத்தார்க்கு உபதேசித்தல்)
நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம் மல்லாண்ட தடக்கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று எல்லாரும் அறியாரோ? எம்பெருமான் உண்டூமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே? அவனருளே உலகாவது அறியீர்களே?
நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய் ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் வெற்றிப் போர்க்கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கொற்றப்போர் ஆழியான் குணம் பரவாச் சிறுதொண்டர் கொடியவாறே!
பனிப் பரவைத் திரை ததும்பப் பாரெல்லாம் நெடூங்கடலே ஆன காலம் இனிக் களைகணிவர்க்கில்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி முனித்தலைவன் முழங்கொளி சேர் திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கனிகளவத் திருவுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே
பாராரும் காணாமே பரவைமா நெடூங்கடலே ஆன காலம் ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்தது உள்ளத் தோராத உணர்விலீர்! உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே
பேயிருக்கும் நெடூவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகு காலம் தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான் போயிருக்க மற்றிங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர்! பெற்ற தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டூதிரோ? மாட்டாத தகவற்றீரே
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே
மறம் கிளர்ந்து கருங்கடல் நீர் உரந்துரந்து பரந்தேறி அண்டத்து அப்பால் புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி அறம் கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடூந்தகையை நினையாதார் நீசர் தாமே
அண்டத்தின் முகடழுந்த அலைமுந்நீர்த் திரை ததும்ப ஆ!ஆ! என்று தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டுமிழ்ந்தது அறிந்து சொன்ன காவளரும் பொழில் மங்கைக் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார் பூவளரும் திருமகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே
அடிவரவு: மை நில்லாத நெற்றி பனி பாராரும் பேய் மண் மறம் அண்டத்தின் தேவரை நீள்நாகம்