காசையாடை மூடியோடிக் காதல் செய்தான் அவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம்பெருமான் வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
2-2. காசையாடை
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
காவி ஆடை போர்த்திச் சென்று காதல் செய்தவனின் ஊரைப் பாடும் பதிகம். அவனை நம்பியவர்களின் நாசம் நீங்கும் என்பதை ஒவ்வொரு பாசுரமும் உறுதி செய்கிறது. வேயின் இசையும் ஆயர் வாழ்வும் நிறைந்த அத்தலத்தின் காட்சியை ஆழ்வார் விரிவாக வருணிக்கிறார்.
பெரிய திருமொழி 2-2 - காசையாடை (திரு எவ்வுளூர்)
தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெருநிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே
பந்தணைந்த மெல்விரலாள் பாவை தன் காரணத்தால் வெந்திறல் ஏறேழும் வென்ற வேந்தன் விரிபுகழ் சேர் நந்தன் மைந்தனாக ஆகும் நம்பி நம்பெருமான் எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே
பாலனாகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆலிலை மேல் சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில் நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி ஏல நாறும் பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே
சோத்த நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும் ஆத்த நம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்க்கெல்லாம் மூத்த நம்பி முக்கணம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
திங்கள் அப்பு வான் எரி காலாகி திசை முகனார் தங்கள் அப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண் தொங்கலப்பு நீள் முடியான் சூழ் கழல் சூட நின்ற எங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன் தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு இனியன் எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள் வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணிவண்ணன் அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம்புறவில் மங்கையர் கோன் கலியன் கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார் அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமருலகே
அடிவரவு: காசையாடை தையலாள் முன் பந்தணைந்த பாலன் சோத்தம் சோத்தம் திங்கள் முனிவன் பந்திருக்கும் இண்டை வில்